செய்திகள்
கோப்புபடம்

சாத்தூர் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

Published On 2021-01-25 14:39 GMT   |   Update On 2021-01-25 14:39 GMT
சாத்தூர் அருகே பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி நாச்சியார் (வயது38). அதே பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவரின் மனைவி அனிதா. இவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனிதாவின் உறவினர்களான முருகன் (40), மாரீஸ்வரன் (27), அய்யனார் (30), ஈஸ்வரன் (20) ஆகியோர் நாச்சியாருடன் தகராறில் ஈடுபட்டு கடுமையான வார்த்தைகளால் பேசியதுடன் அவரை தாக்கி உள்ளனர். 

இதில் காயமடைந்த நாச்சியார், சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகன், மாரீஸ்வரன், அய்யனார், ஈஸ்வரன் ஆகியோரை சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News