செய்திகள்
வியாபாரியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
வியாபாரியை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). பலூன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் தர்மன் (30). சம்பவத்தன்று கனகராஜிடம், தர்மன் பீடி கேட்டுள்ளார். ஆனால் அவர் தரமறுத்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தர்மன் கீழே கிடந்த கல்லை எடுத்து கனகராஜை தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.