செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் விஷம் குடித்து நிதி நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2021-01-24 13:11 GMT   |   Update On 2021-01-24 13:11 GMT
ரோட்டில் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு பெரியார்நகர் சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. மதுகுடிக்கும் பழக்கம் உண்டு.

இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் காணப்பட்ட அருண்குமார் நேற்று முன்தினம் விஷத்தை குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருண்குமார் இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News