செய்திகள்
வெற்றிலை

அந்தியூர் சந்தையில் ரூ.6 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

Published On 2021-01-23 14:00 GMT   |   Update On 2021-01-23 14:00 GMT
அந்தியூர் சந்தையில் நேற்று வெற்றிலை விற்பனை ரூ.6 லட்சத்துக்கு நடந்தது.
அந்தியூர்:

அந்தியூர் சந்தையில் நேற்று வெற்றிலை விற்பனை நடந்தது. இந்த சந்தைக்கு அத்தாணி, கள்ளிப்பட்டி, வேம்பத்தி, வெள்ளாளபாளையம், காட்டுப்பாளையம், சந்தியபாளையம், பிரம்மதேசம், முனியப்பன்பாளையம், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

100 எண்ணிக்கைகள் கொண்டது ஒரு கட்டு ஆகும். இதில் ராசி ரக வெற்றிலை ரூ.100 முதல் ரூ.120 வரையும், பீடா வெற்றிலை ரூ.50 முதல் ரூ.60 வரையும், செங்காம்பு ரூ.6-க்கும் என மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை ஆனது. ஈரோடு, பெருந்துறை, மேட்டூர், தர்மபுரி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெற்றிலையை வாங்கிச் சென்றனர்.
Tags:    

Similar News