செய்திகள்
விருதுநகர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
விருதுநகர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாலேஸ்வரி (வயது 82). இவர் நேற்று மதியம் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையைபறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகி விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.