செய்திகள்
சிவகாசி அருகே மாணவியை கடத்தி திருமணம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிவகாசி அருகே மாணவியை கடத்தி திருமணம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
திருத்தங்கலில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த முத்தீஸ்வரன் (வயது 19) என்பவர் மதுரை மாவட்டம் பேரையூருக்கு கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமாராணி, மாணவியை மீட்டு வாலிபர் முத்தீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.