செய்திகள்
அத்தாணியில் ஆம்னி வேன் மோதி 2 தொழிலாளர்கள் விபத்தில் பலி
அத்தாணியில் ஆம்னி வேன் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியை சேர்ந்தவர் ராசன் (42), கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (48). இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்கள்.
நேற்று இரவு ராசன் தனது மோட்டார் சைக்கிளில் செல்வனுடன் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்தார்.
இரவு 9.30மணி அளவில் அவர்கள் அத்தாணி கம்மங்காடு குடிநீர் வடிகால் வாரியம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே அத்தாணியில் இருந்து அந்தியூர் நோக்கி சின்னதம்பி பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆம்னி வேன் ஓட்டி வந்தார்.
அப்போது திடீரென ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் ராசன், செல்வன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தில் ஆம்னி வேன் டிரைவர் ராஜேந்திரனும் காயமடைந்தார். அவரும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியை சேர்ந்தவர் ராசன் (42), கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (48). இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்கள்.
நேற்று இரவு ராசன் தனது மோட்டார் சைக்கிளில் செல்வனுடன் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்தார்.
இரவு 9.30மணி அளவில் அவர்கள் அத்தாணி கம்மங்காடு குடிநீர் வடிகால் வாரியம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே அத்தாணியில் இருந்து அந்தியூர் நோக்கி சின்னதம்பி பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆம்னி வேன் ஓட்டி வந்தார்.
அப்போது திடீரென ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் ராசன், செல்வன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தில் ஆம்னி வேன் டிரைவர் ராஜேந்திரனும் காயமடைந்தார். அவரும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.