செய்திகள்
பல்லாவரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லாவரம் அருகே ‘வாட்ஸ்-அப்’பில் மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்:
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருநீர்மலை சாலையில் வசித்து வந்தவர் அருண்குமார் (வயது 29). இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையில் சரியான வேலை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவித்த அருண்குமார், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவிக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.