செய்திகள்
தற்கொலை

கெலமங்கலம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-01-18 04:36 GMT   |   Update On 2021-01-18 04:36 GMT
கெலமங்கலம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள ரத்தனகிரி கொத்தூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகள் காவ்யா (வயது 21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ரவிக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரவி கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தில் தறி வேலை செய்து வந்தார். இதனால் காவியா தனது பெற்றோர் வீட்டிலே இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காவியா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை லட்சுமணன் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமாணமான 2½ ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News