செய்திகள்
தற்கொலை

மத்திகிரி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-01-18 03:40 GMT   |   Update On 2021-01-18 03:40 GMT
மத்திகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:

கர்நாடக மாநிலம் கல்புருக்கி மாவட்டம் சித்தபூர் தாலுகா மலகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யகாந்த் (வயது 45). இவர் மத்திகிரி அருகே தாசரப்பள்ளியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சூர்யகாந்த் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் நலம் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News