செய்திகள்
மதுபானம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.8¾ கோடிக்கு மது விற்பனை

Published On 2021-01-16 08:58 GMT   |   Update On 2021-01-16 08:58 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.8¾ கோடிக்கு மது விற்பனையானது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனையாகிறது. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் அதிகமாக மது விற்பனை நடக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதியும், 14-ந் தேதியும் மாவட்டத்தில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

மது பிரியர்களும் தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி சென்றார்கள். குறிப்பாக பீர் வகைகள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட அதிகளவில் மது விற்பனையாகி உள்ளது. 14-ந் தேதி மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 78 லட்சத்து 77 ஆயிரத்து 770-க்கு மதுபானங்கள் விற்பனையானது.

இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.1½ கோடி அதிகமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News