செய்திகள்
யானை

சூளகிரி அருகே ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

Published On 2021-01-09 14:47 GMT   |   Update On 2021-01-09 14:47 GMT
சூளகிரி அருகே குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை யானை நடமாடியதை கண்டு பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சூளகிரி:

ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர்பள்ளம் ஆகிய வனப்பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து நேற்று ஒரு யானை பிரிந்து ராமாபுரம், ஆழியாளம், கோபசந்திரம் வழியாக காமன்தொட்டி கிராமத்திற்குள் புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை யானை நடமாடியதை கண்டு பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் அந்த யானையை மீண்டும் சான மாவு காட்டுக்கு விரட்டினர்.
Tags:    

Similar News