செய்திகள்
வனப்பகுதியில் சந்தன மர வேர்களை தோண்டிய 2 பேர் கைது
வனப்பகுதியில் சந்தன மர வேர்களை தோண்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் தொழுவபெட்டா காப்புக்காட்டில் உள்ள காரக்கிணறு பெல்லட்டி பாதையில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் இருந்த சந்தனமர வேர்களை தோண்டிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நலபரம்பட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 67), தேன்கனிக்கோட்டையை அடுத்த போப்பனூரை சேர்ந்த மல்லப்பன் (65) என தெரிய வந்தது. இவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் சந்தனமர வேர்கள் மற்றும் கடப்பாரை, கொடுவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு தலா, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.