செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரிகை போலீசார் ஏ.செட்டிப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மேன்சன்தொட்டியை சேர்ந்த ராஜேஷ் (வயது 30), கங்கசந்திரம் சீனிவாசன் (26), அத்திமுகம் கணேஷ் (23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அத்திமுகம் தினேஷ், சூளகிரி திவாகர், கும்பளம் லோகேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.