செய்திகள்
ஊத்தங்கரை அருகே விபத்தில் தொழிலாளி பலி
ஊத்தங்கரை அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள வீராட்சி குப்பம் புதுரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று கல்லாவியில் இருந்து வீராட்சி குப்பத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் மொபட்டில் வைத்திருந்த நீளமான மூங்கில் குச்சி எதிரில் வந்த அரசு பஸ் மீது மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரம் பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.