செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் டிரைவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜூப்ளி ரோடு அருகே உள்ள நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரஹிம். சரக்கு வேன் டிரைவரான இவர் மிட்டாய் வியாபாரமும் செய்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சகோதரியை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.
பின்னா் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவா் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ மற்றும் பெட்டிகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 கிராம் தங்க நகை, பெட்டியில் இருந்த ரூ.35 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜூப்ளி ரோடு அருகே உள்ள நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரஹிம். சரக்கு வேன் டிரைவரான இவர் மிட்டாய் வியாபாரமும் செய்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சகோதரியை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.
பின்னா் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவா் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ மற்றும் பெட்டிகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 கிராம் தங்க நகை, பெட்டியில் இருந்த ரூ.35 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.