செய்திகள்
கைது

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது

Published On 2020-12-27 22:22 IST   |   Update On 2020-12-27 22:22:00 IST
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த அரியதங்கம் (வயது 28) என்ற பெண்ணின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அரியதங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News