செய்திகள்
ஹெலிகாப்டர்

மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை

Published On 2020-12-24 23:42 GMT   |   Update On 2020-12-24 23:42 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் தனியார் சார்பில் மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் தனியார் சார்பில் மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு பொறியியல் கல்லூரியும், கோவையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளன.

இந்த சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த ஹெலிகாப்டரில் அழகர்கோவில், ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடியிலுள்ள புராதன சின்னங்கள் உள்ளிட்டவற்றை சுமார் 15 நிமிட பயணத்தில் கண்டு ரசிக்கும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 29-ந் தேதி வரை மட்டுமே முதல்கட்டமாக இந்த சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பயணிகளின் வருகையை பொறுத்து இந்த சேவை நீட்டிக்கப்படும் எனவும் அந்த தனியார் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News