செய்திகள்
உத்திரமேரூர் அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை திருட்டு
உத்திரமேரூர் அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூரை அடுத்த தண்டரை கூட்டுரோடு அன்னைநகரைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 42). இவரது மனைவி ரோஸ்லின்(40). தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. இவர்கள் 4 பேரும் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவர்களுடைய விவசாய நிலத்திற்கு சென்றனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் தங்கநகை, ரூ.30 ஆயிரமும் திருடு போயிருந்தது.
இதையடுத்து உடனடியாக சார்லஸ் பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.