செய்திகள்
கைது

கழிஞ்சூரில் மது விற்ற கணவன்-மனைவி கைது

Published On 2020-12-21 10:13 GMT   |   Update On 2020-12-21 10:13 GMT
கழிஞ்சூரில் மது விற்ற கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:

காட்பாடி கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வந்தது. இதனை கணவன் மனைவி இருவரும் செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே மது வாங்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் ஜாப்ராப் பேட்டை ராணுவ வீரர் யோகராஜ் கொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில்வே கேட் அருகே மது விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 47) அவருடைய மனைவி நிர்மலா (45) ஆகியோரை விருதம்பட்டு போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இவர்களுக்கு எந்த டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக மது விற்பனை செய்யப்பட்டது. யார் விற்பனை செய்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News