செய்திகள்
தற்கொலை

ஊசூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2020-12-20 08:12 GMT   |   Update On 2020-12-20 08:12 GMT
ஊசூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூரை அடுத்த ஊசூரை சேர்ந்தவர் குபேந்திரன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி (வயது 37) முறுக்கு தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கோமதி கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கடந்த மாதம் பைனான்சியர் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கோமதியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சில மாதங்களில் திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளார். அதனை ஏற்காத பைனான்சியர் கடும் வார்த்தைகளில் திட்டி உள்ளார். இதுகுறித்து கோமதி அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கோமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிந்து பணப்பிரச்சினை காரணமாக கோமதி தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News