செய்திகள்
கைது

குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

Published On 2020-12-20 08:06 GMT   |   Update On 2020-12-20 08:06 GMT
குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அருகே மோர்தானா கிராமத்தில் சாராயம் விற்பதாக வந்த புகாரின்பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சத்தியமூர்த்தி, கார்த்தி உள்ளிட்ட போலீசார் நேற்று காலை மோர்தானா கிராமத்தில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கிராமத்தில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த திலகா (வயது 40), சாலி என்ற வேண்டாமணி (32) ஆகிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
Tags:    

Similar News