செய்திகள்
கோப்புபடம்

ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து திருநங்கை தற்கொலை

Published On 2020-12-17 20:54 IST   |   Update On 2020-12-17 20:54:00 IST
ராயக்கோட்டை அருகே திருநங்கை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராகவி (வயது 26). திருநங்கையான இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து திருநங்கை ராகவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News