செய்திகள்
ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ராயக்கோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா (வயது 31). மனநலம் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.