செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற தங்கமணி (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். பேரிகை போலீசார், பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நாராயணம்மா (50) என்பவரை கைது செய்தனர். இவர்களது கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.