செய்திகள்
ஓசூர் அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் பேரண்டப்பள்ளி போயர் காலனியை சேர்ந்தவர் பூநேசன் (வயது 45). பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த பூநேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.