செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2020-12-15 15:25 IST   |   Update On 2020-12-15 15:25:00 IST
சூளகிரி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

திருப்பத்தூர் மாவட்டம் எஸ்.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 23). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் கோபசந்திரம் பகுதியில் சென்றார். அப்போது சாலையில் வைத்திருந்த டிரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News