செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழையபேட்டையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சவுகத் (வயது52) என்பவரை கைது செய்தனர். இதேபோல் பாலேப்பள்ளி பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற காளியப்பன் (30), சோனாரஅள்ளி பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த தனசேகர்(42) ஆகிய 2 பேரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.