செய்திகள்
ஊத்தங்கரை அருகே வாகனம் மோதி டிரைவர் பலி
ஊத்தங்கரை அருகே வாகனம் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). டிரைவர். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கோவிந்தாபுரம்-திருப்பத்தூர் சாலையில் பெருமாள் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.