செய்திகள்
கோப்புபடம்

தேவகோட்டையில் தூக்குப்போட்டு ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

Published On 2020-12-13 15:07 IST   |   Update On 2020-12-13 15:07:00 IST
தேவகோட்டையில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:

தேவகோட்டை தியாகிகள் சாலை பகுதியை சேர்ந்தவர் ராமசிவா (வயது 42). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு மதிபாலன் என்ற மகனும் ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ராமசிவா திருப்பத்தூர் சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். கொரோனா காலம் என்பதால் வியாபாரம் நஷ்டத்தில் ஓடியது.இதனால் கடனாளி ஆனார். வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்க முடியவில்லை என்ற கவலையுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அறைக்கு சென்று சலவை எந்திரம் வயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவகோட்டை நகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் ராமசிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News