செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
போச்சம்பள்ளி அருகே உள்ள பென்டரஅள்ளியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி பார்கவி (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பார்கவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.