செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள்

சிவகங்கையில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-09 15:09 IST   |   Update On 2020-12-09 15:09:00 IST
ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவகங்கை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சிவகங்கை:

ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவகங்கை மாவட்டத்தில் நேற்று அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாக்டர்கள் திரண்டு நின்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

காரைக்குடி இந்திய மருத்துவ சங்கம் காரைக்குடி காவேரி கிளை சார்பில், மத்திய அரசின் புதிய மருத்துவமனை கொள்கையினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் மைதிலி தலைமை தாங்கினார். டாக்டர் சலீம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய மருத்துவ கொள்கையினால் பாதுகாப்பான, தரமான சேவைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அதனை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்தப்பட்டது. இதில் டாக்டர்கள் காமாட்சி சந்திரன், சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் டாக்டர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் பெரியசாமி தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டம் குறித்து டாக்டர்கள் செங்கதிர், ஏழுமலை, சரவணன், கணியன் பூங்குன்றன் ஆகியோர் விளக்கி பேசினார்கள்.

மானாமதுரை மருத்துவ சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் ஜெகன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் டாக்டர்கள் சுந்தராஜன், முத்துபாண்டி, சுரேஷ் ஹெர்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News