செய்திகள்
ராயக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள சின்ன நாகதோனை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் மதுபோதையில் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.