செய்திகள்
ஊத்தங்கரையில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
ஊத்தங்கரையில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களிடம் பேரூராட்சி பணியாளர்கள் அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஊத்தங்கரை நான்கு ரோட்டில் பேரூராட்சி செயல் அலுவலர் மதியழகன் தலைமையில் இளநிலை உதவியாளர் சேகர் தேர்வுநிலை பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.