செய்திகள்
கோப்புபடம்

கிருஷ்ணகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்

Published On 2020-12-07 19:30 IST   |   Update On 2020-12-07 19:30:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அந்தந்த பகுதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

இதில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஜிங்கலூர் ஏலகி (வயது 28), பாகலூர் நாராயணன் (53), போச்சம்பள்ளி மேக்லாம்பட்டி சீதாராமன் (36), ஆவத்தவாடி பெரியண்ணன் (55) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

அவர்கள் கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News