செய்திகள்
கைது

செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது

Published On 2020-12-02 12:41 GMT   |   Update On 2020-12-02 12:41 GMT
செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:

செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முள்ளுகுட்டை ஏரி அருகே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருவள்ளுவர்நகர் நரிக்குறவர்காலனியை சேர்ந்த வேலு (வயது 38), மகேஷ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News