செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

தீப விழாவின்போது பக்தர்களை விரட்டிவிட்டு வி.ஐ.பி.க்களை மட்டும் அனுமதித்த போலீசார்

Published On 2020-12-01 09:16 GMT   |   Update On 2020-12-01 09:16 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கானவர்களை கோவில் வளாகத்தில் அனுமதித்தது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை என்ற காரணத்தை கூறி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

அதேபோல் கிரிவலம் செல்லவும் தடை விதித்தது. மேலும் வெளியூர் பக்தர்களை திருவண்ணாமலை நகருக்குள் 3 நாட்கள் வரவும் அனுமதி மறுத்தது.

நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கோவில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அடுக்கடுக்காக விதித்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளே வி.ஐ.பி., வி.வி.ஐ.பி.க்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழக்கம்போல் அனுமதி அளித்தனர்.

தங்க கொடி மரம் அருகே நூற்றுக்கணக்கான வி.வி.ஐ.பி.க்கள் உள்ளிட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த உத்தரவு காற்றில் பறந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கானவர்களை கோவில் வளாகத்தில் அனுமதித்தது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News