செய்திகள்
தற்கொலை

விருதுநகர் அருகே பெண் தற்கொலை

Published On 2020-11-30 10:10 GMT   |   Update On 2020-11-30 10:10 GMT
விருதுநகர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள சின்ன பேராலியை சேர்ந்தவர் முரளிகுமார். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 26). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த முனீஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி முனீஸ்வரியின் தந்தை சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (57) பாண்டியன் நகர் போலீசில் தனது மகள் இறப்பு குறித்து விசாரணை நடத்த கோரி புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News