செய்திகள்
தற்கொலை

சிவகாசி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2020-11-30 07:22 GMT   |   Update On 2020-11-30 07:22 GMT
சிவகாசி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி கீழத்திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் கருப்பையா மனைவி கருப்பாயி (வயது 46). 3 குழந்தைகளின் தாயான கருப்பாயிக்கு கடந்த 20 வருடங்களாக எலும்பு உருக்கி நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர் அடிக்கடி மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நோய் கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கருப்பாயி நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் வெளியே தீக்குளித்துள்ளார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், கருப்பாயி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News