செய்திகள்
கைது

உடையார்பாளையம் அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2020-11-29 04:09 GMT   |   Update On 2020-11-29 04:09 GMT
உடையார்பாளையம் அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் வானதிரையான்பட்டிணம் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(வயது 56), சிவக்குமார்(54) ஆகியோர் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News