செய்திகள்
விபத்து பலி

ராயக்கோட்டை அருகே விபத்தில் முதியவர் பலி

Published On 2020-11-28 06:54 GMT   |   Update On 2020-11-28 06:54 GMT
ராயக்கோட்டை அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள திம்ஜேப்பள்ளி ஊராட்சி பெரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 65). இவர் தனது மொபட்டில் தனது ஊரிலிருந்து ராயக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கெலமங்கலம் - ராயக்கோட்டை ரோட்டில் திம்ஜேப்பள்ளி பிரிவு சாலையில் எதிரே வந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரான ரத்தினகிரியை சேர்ந்த பீமன் மகன் வேலு (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News