செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2020-11-28 06:40 GMT   |   Update On 2020-11-28 06:40 GMT
தேன்கனிகோட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிகோட்டை:

தேன்கனிகோட்டை அருகே உள்ள ஜவளகிரி பகுதியில் தளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஜவளகிரி கிராமத்தை சேர்ந்த சீனிவாஷ் (வயது 34), சீத்தாராம் (39) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News