செய்திகள்
கோப்புபடம்

குருபரப்பள்ளி அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை

Published On 2020-11-27 09:37 GMT   |   Update On 2020-11-27 09:37 GMT
குருபரப்பள்ளி அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள போகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சம்பத் (வயது 20). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

இதன்காரணமாக அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த சம்பத் காட்டிநாயனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News