செய்திகள்
தெருக்கூத்து கலைஞர்கள் கலைநிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் கலைநிகழ்ச்சி

Published On 2020-11-26 13:11 GMT   |   Update On 2020-11-26 13:11 GMT
கொரோனா விழிப்புணர்வு நாடகம், நாதஸ்வரம், தவில், தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மரக்கால் ஆட்டம், உறுமி சேவையாட்டம், காளி அம்மன் நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தினர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில், மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள் நல அறக்கட்டளையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் தொடங்கி வைத்து, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், கொரோனா விழிப்புணர்வு நாடகம், நாதஸ்வரம், தவில், தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மரக்கால் ஆட்டம், உறுமி சேவையாட்டம், காளி அம்மன் நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தினர். வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த சினிமா பின்னணி பாடகரும், நாடகக்கலைஞருமான பெருமாள் மற்றும் போளூர் கிராமிய பாடகர் மகேந்திரன் ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களை பாடினர்.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது நகராட்சி ஆணையர் சந்திரா மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியின் போது, கைகளை அடிக்கடி சோப்பால் கழுவ வேண்டும். கண், மூக்கு, வாய் பகுதிகளை கைகளால் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். இதை வலியுறுத்தி கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் இருந்து காந்தி சாலை வழியாக ஊர்வலமாக சென்று பழையபேட்டை டவுன் பஸ் நிலையத்தில் பிரசாரத்தை முடித்தனர்.
Tags:    

Similar News