செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2020-11-24 05:49 GMT   |   Update On 2020-11-24 05:49 GMT
தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீசார், பென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கோகுல் நகரை சேர்ந்த அண்ணாதுரை (வயது 45), சின்னபென்னாங்கூர் பெருமாள்(43), ஆசாத் தெரு நூருல்லா(54) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News