செய்திகள்
கோப்பு படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலி எண்ணிக்கை 700-ஐ நெருங்குகிறது

Published On 2020-11-16 18:27 IST   |   Update On 2020-11-16 18:27:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பலி எண்ணிகை 700-ஐ நெருங்கிறது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 44 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 695 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 908 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 89 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 136 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 643 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 840 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 412 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 492 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News