செய்திகள்
அரசு அருங்காட்சியகம் திறப்பு

7 மாதங்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறப்பு

Published On 2020-11-12 09:29 GMT   |   Update On 2020-11-12 09:29 GMT
புதுக்கோட்டையில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு அருங்காட்சியகங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வின் காரணமாக அரசு அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டன. அதன்படி புதுக்கோட்டையில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் 7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கைகளை கழுவ கிருமி நாசினி வழங்கப்படுகிறது. மேலும் அருங்காட்சியகத்திற்குள் உள்ளதை பொதுமக்கள் பார்வையிட சமூக இடைவெளி விட்டு நிற்கும் அளவிற்கு தரையில் வட்டம் வரையப்பட்டுள்ளது. பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அருங்காட்சியகத்தை பொதுமக்கள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். ஒவ்வொரு வெள்ளி, மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் அரசு அருங்காட்சியகத்திற்கு விடுமுறையாகும். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூடுதல் பொறுப்பு) பக்கிரிசாமி தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News