செய்திகள்
கொரோனா பரிசோதனை

பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-11-11 17:16 IST   |   Update On 2020-11-11 17:16:00 IST
திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி தலைமை தாங்கினார். டாக்டர் புவனேஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் 52-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் ஊராட்சி செயலாளர் மதியழகன், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News