செய்திகள்
கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2020-11-10 06:07 GMT   |   Update On 2020-11-10 06:07 GMT
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே சங்கமங்கலம் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற பழையனூர் மேல்பாதியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் வீரமுருகன்(வயது 20), சாராயம் விற்றது தெரிய வந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமுருகனை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News