செய்திகள்
கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2020-11-09 10:54 IST   |   Update On 2020-11-09 10:54:00 IST
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே சிக்கல் அய்யனார் கோவில் அருகில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் செங்கோட்டையன் (வயது33), தேவூர் குயவர் தெருவில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் தர்மர் கோவில் தெருவை சேர்ந்த பிரதாப் மனைவி பூமணி (35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கோட்டையன், பூமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News